31 ஆக., 2008

பிருந்தாவின் கவிதைகள்-2: "சுனாமி"

அன்று -
அன்பிற்கு மனிதன்
பொறுமைக்கு நிலம்
பெருமைக்குக் கடல்.
இன்று -
ஒரு பக்கம் கொலை, கொள்ளை
மனித நேயம் என்பதே இல்லை
எங்கும் பொய், புரட்டு;
மண்ணுலகெங்கும் இருட்டு.
மனிதனின் ஆசையின் எல்லை
அதற்கோ முடிவில்லை.
நிலத்தைச் சுரண்டினான்;
கடலைச் சூறையாடினான்;
நிலம் பூகம்பமாய் வெடித்தது;
கடலும் தன் பங்கிற்கு அள்ளியது;
எதற்கும் கொடுக்கும் 'விலை',
இவற்றிடம் செல்லவில்லை.

(2004 டிசம்பரில் இந்தியாவைத் தாக்கிய சுனாமிக்குப்பின் எழுதியது.)

கருத்துகள் இல்லை: