5 செப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-18: "மதம்"

அரிசிக்கு கல்லு
பாலுக்கு தண்ணி
சர்க்கரைக்கு ரவை
டீக்கு இலவம் பிஞ்சு

தேனுக்கு சர்க்கரைப்பாகு
காப்பிக்கு புளியங்கொட்டை
மிளகாய்ப்பொடிக்கு செங்கல்
சாம்பார்பொடிக்கு மஞ்சள்

முடிக்கு சவுரி
உதட்டுக்கு சாயம்
புருவத்திற்கு மை
மீசைக்கு "டை"

இசைக்கு இரைச்சல்
சீரியலுக்கு அழுகை
சினிமாவிற்கு ஆபாசம்
காதலுக்கு காமம்

காரருக்கு கரும்புகை
நதிக்கு ஆலைக்கழிவு
நடிப்புக்கு இமிடேஷன்

அரசியலுக்கு வாரிசு
தேர்தலுக்கு ஜாதி
மாணவனுக்கு அரசியல்
மனிதனுக்கு மதம்.

கருத்துகள் இல்லை: