21 செப்., 2008

உச்சிக்கு உயர்த்துங்கள்! - கி.கஸ்தூரிரங்கன்

ஒவ்வொரு தெருக்கொடியிலும் தொலைபேசி நிலையங்கள் முளைத்திருப்பதற்குக் காரணமானவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன். செயற்கைக்கோள் படங்களுடன், வானிலை அறிக்கைகள் வெளியாவதற்கும் இவர்தான் காரணம். 38 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இந்திய செயற்கைக்கோள் நிலைபெற்றதும் இவரால்தான்.

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது கேரள மாநிலம், எர்ணாகுளத்தில். மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம். விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் பிஎச்.டி. பட்டம். பின்னர் இந்திய விண்வெளித்துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைக்கோள்கள் (ஐ.ஆர்.எஸ். வகை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைக்கோள்கள், துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (பி எஸ் எல் வி) என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்பு. அடுத்து இந்திய விண்வெளித் துறைத் தலைவர் பொறுப்பு. இப்படி சாதனைமேல் சாதனை நிகழ்த்தியவர்.

சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது, ஸ்ரீ ஹரி ஒம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாராபாய் விருது, எம்.பி.பிர்லா விருது என இவர் பெற்ற விருதுகள் நட்சத்திர எண்ணிக்கையை நீள்கின்றன.

கருத்துகள் இல்லை: