15 அக்., 2008

இன்று ஒரு தகவல்-11: "சென்னையில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி"

மத்திய மாநில அரசுகளின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறைகள் இணைந்து சென்னையில் நடத்திய தாய் சேய் நலக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவர்கள் பேசியதிலிருந்து:

* சென்னையில், அரசு சார்பில் ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்.
* மாவட்டம்தோறும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும்.
* மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஒரு முன்மாதிரிக் கல்லூரியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* வரும் ஆண்டிலிருந்து திருமங்கலம் கல்லூரியில் முதுகலைப் படிப்பு தொடங்கப்படும்.

தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் பேசியது:
* இந்திய அரசொடயும் இணைந்து மாநில அளவில் தாய்-சேய் நல இயக்கத்தைத் துவக்கியுள்ளோம்.
* பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பிரதிகள், புத்தகங்கள், கருத்துரைகள் மற்றும் விளம்பரக் குறும்படங்களை ஹோமியோபதி மருத்துவ தாய்-சேய் நல இயக்கம் வெளியிட்டுள்ளது.
* ஹோமியோபதி மருத்துவத்தின் தனித்தன்மையை மக்கள் அறிய முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

கருத்துகள் இல்லை: