6 நவ., 2008

கருத்துக்கள்-10: "அன்பை வளர்க்கும் இலக்கியம்" - ஜெயகாந்தன்

நம் நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்களிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமையை ஏற்படுத்த இலக்கியத்தால்தான் முடியும். மதம் என்பது ஒரு புத்தகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் இவை எல்லாமே நூல்கள்தான்! நூல்களைத் தெய்வமாக மதிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. நம் முன்னோர்களைத் தரிசிக்க ஒரே வழி புத்தகங்கள்தான்! மனக்கோணல்களைச் செம்மைப்படுத்துவதும் புத்தகங்கள்தான்! ...

உயிர் உள்ளவரை கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். பருவம் மற்றும் ரசனைக்கேற்ப புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்....

புத்தகம் என்பது குரு, கடவுளுக்குச் சமம். அறிவியல் வளர்க்கும் இக்காலத்தில் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அன்பில்லாமல் வாழ்வின் இயக்கம் அசையாது. அன்பை வளர்க்க இலக்கியம் தேவை!


ஈரோட்டில் ஆகஸ்ட் 2008-ல் நடந்த புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் பேசியதிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: "இனிய உதயம்", தமிழ் மாத இதழ், செப்டம்பர் 2008 & திரு ஜீவா தங்கவேல்.

கருத்துகள் இல்லை: