7 நவ., 2008

கருத்துக்கள்-11: "புகைக்குடி" - யோகி சுத்தானந்த பாரதியார்

சந்தைக்கூட்டம், வண்டிக்கூட்டம், காட்சிக்கூட்டங்களில் எல்லாம் கரிக்காற்று மிகுதி. கரிக்காற்றும், வியர்வை நாற்றமும் ஆளைக் கெடுக்கும். சுருட்டுப் புகையும் கூடிவிட்டால் வேறு வினை வேண்டா! இச்சுருட்டை எந்த சைத்தான் கொண்டுவந்தான்? நெஞ்சைக்கெடுத்து, வாயைச் சாக்கடை நாற்றமாக்கி, பல்லைக் கெடுத்து, பசியைக் கெடுத்து, உருசியைக் கெடுத்து, நச்சுப் புகையால் சுற்றிலும் உள்ள பலருக்குத் தீங்கு விளைவிக்கும் இப்புகைக்குடிகளை ஏனோ பகுத்தறிவுள்ள மனிதன் பழகினான்! பார்த்தால் ஒரு பைசா பீடி; புகைத்தால் பல பேருக்குக் கேடு! ஒரு பெரிய அறையின் காற்றைக் கெடுக்க ஒரு சிறிய சுருட்டுப் போதும்! ஒருவர் பிரம்மப்பத்திர புகைவிட்டால் 2000 பேர் மூச்சைக் கெடுப்பதாகும். மூச்சைப் பிடித்து ஆளைக் கொள்கிறதே! இந்த சுருட்டுப் பாவியை ஒழிக்கலாகாதா? அட, நாகரிகமே! பொறிப்புகை, கரிப்புகை, வண்டிப்புகை, சுருட்டுப்புகை, மண்ணெண்னைப்புகை, சாராய வாடை, கும்பல் நாற்றம்! காடு, மலை, வானம், கடல் வெளிகளுக்குப் போனால்தான் நல்ல காற்று!
- யோகி சுத்தானந்த பாரதியாரின் "உடல் உறுதி" என்ற நூலிலிருந்து.
நன்றி: இயற்கை நாதம், அக்டோபர் 2008, (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

கருத்துகள் இல்லை: