1 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-35: "சிதைக்கவா, செதுக்கவா?"

பீடி வளிக்கலாம்
சிகரெட் புகைக்கலாம்
கஞ்சா அடிக்கலாம்
செல் பேசலாம்
ஒருபால் உறவு கொள்ளலாம்
பணம் இருந்தால் செய்யலாம்,
இவை அத்தனையும்.

குழம்ப வேண்டாம்
எங்கே என்று.
அதுதான் நம்
மத்திய சிறைச்சாலை!

சிறைச்சாலை
வருத்தவா? திருத்தவா?
பள்ளிக்கூடம்தான்!
படிப்பினை என்ன?

அம்மணப்படுத்தி
ஆளுமை சிதைத்து
மொட்டையடித்து
விகாரமாக்கி
ஒரு தப்பு செய்து மாட்டி
உள்ளே வந்தவனை,
பலவகை தப்பு
செய்தவருடன் பழகவிட்டு
தவறுகள் பல செய்ய
தயாரித்து
வெளியேவிடவா சிறைச்சாலை?

சிறைச்சாலையும்
தவச்சாலையாகலாம்,
இலக்கு என்ன
என்ற தெளிவு பிறந்தால்!

கருத்துகள் இல்லை: