6 நவ., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-37: "ராமர் பாலம்"

அறையை
சுத்தம் செய்யும்போது
நான் தூக்கி எறிய இருந்த
அந்தப் பழைய துணியை,
தாத்தாவின் அண்டர்வேர் என்று
பிடுங்கி வைத்தான் நண்பன்.

அது எதுக்குடா?
அசிங்கமா,
இடைஞ்சலாத் தொங்குது;
காயப்போட இடம் வேண்டும்
என நான் சப்தமிட,
தாத்தாவின் ஞாபகச் சின்னமது
என்றான் நண்பன் பிடிவாதமாக.

தாத்தாவின் ஞாபகமாக
அவர் எழுதியவைகளைப்
படிக்கலாம், பதிப்பிக்கலாம்,
படித்தபடி நடக்கலாம்;
அதையெல்லாம் விட்டுவிட்டு,
அன்டர்வேரை வைத்து
இதென்ன மூட நம்பிக்கை?

என் நம்பிக்கைகளோடு
விளையாடாதே,
அது பாட்டுக்குத் தொங்கட்டும்;
இத்தனூண்டு இடத்தில்
கப்பலா விடப்போகிறாய்
என நண்பன் கடுப்படிக்க,

உன் தாத்தா காலத்தில்
அன்டர்வேரே கிடையாதே
என புதிதாய் நான் கொடிபிடிக்க,
சண்டை இன்னும் முடியவில்லை.
நீங்களாவது தீர்ப்புச் சொல்லுங்க!

கருத்துகள் இல்லை: