1 டிச., 2008

என்ன நடக்கிறது?-4: "கேள்வித்தாள் அச்சிட மறந்த பல்கலைக்கழகம்"

தேர்வுக்கான வினாத்தாள்களை அச்சடிக்காமல் பல்கலைக்கழகம் மறந்துவிட்டது. இதனால், தேர்வு எழுதவந்த மாணவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ், மும்பை, தானே மற்றும் ரத்னகிரியில் உள்ள 19 மையங்களில் தேர்வு நடக்கவிருந்தது. மொத்தம் 90 மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். அப்போது, தேர்வைக் கண்காணிக்கும் அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்குவதற்கான வினாத்தாள்களை தேடியபோது, அது கிடைக்கவில்லை. அங்கும், இங்கும் அலைந்த பின்னர், பல்கலைக்கழகத்தில் இருந்தே வினாத்தாட்கள் வரவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போதுதான், அன்று நடக்கவிருந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களே அச்சிடப்படவில்லை என்பதை பல்கலை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர்.
தினமலர், மதுரை, 8.11.2008 அன்று வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி.

கருத்துகள் இல்லை: