30 டிச., 2008

என்ன நடக்கிறது?-8: "பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை!"

நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பாடு குறித்த ஆய்வு சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் மூன்றில் இரண்டு பங்கு தலைமை ஆசிரியர் இல்லாமலேயே செயல்படுகின்றன. மகராஷ்ட்ரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 65% பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. ஏழு மாநிலங்களில் 70% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை. பத்து மாநிலங்களில் 20% ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 90% அதிகமான ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. 78% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை.
தினகரன் (மதுரைப் பதிப்பு), டிசம்பர் 27, 2008 இதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி.
நன்றி: தினகரன்.

கருத்துகள் இல்லை: