30 டிச., 2008

சாதனை-5: "மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகதமி விருது!"

பிரபல சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவிருக்கிறது. இலக்கிய படைப்புகளுக்கான மிக உயர்ந்த இந்த விருது, அவருடைய "மின்சாரப்பூ" என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.

பத்து வயதில் தந்தையை இழந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கவேண்டியதாலும், வறுமையினாலும் ஐந்தாம் வகுப்பிற்குமேல் படிக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்முயற்சியால் படிப்பதை நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களைத் தேடிப்படித்தார். கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்திவரும் இவர், இதுவரை முப்பத்தாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இருபத்திஇரண்டு சிறுகதைத் தொகுப்புகள்.

காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு எமது அழைப்பை ஏற்று வந்து வாசகர்களுடன் உரையாடி, சிறப்புரையாற்றி அவரது எளிமையாலும், தெளிவான சிந்தனையாலும் அனைவரையும் கவர்ந்தார் என்பதை நினைக்கையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தன்னம்பிக்கையாலும், தளராத ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றிகண்ட இச்சாதனையாளருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: