5 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-48: "எனக்கும் வேண்டும்"

பெண்ணே!
எப்பொழுதும் நீ
ஒருபடி மேல்தான்.

நிரூபித்துவிட்டாய் நீ!
பூமியிலும் நீருக்கடியிலும்
வான்வெளியிலும்
உன் சமநிலையை.

ஒரு விஷயத்தில்
எட்டமுடியாத உயரத்தில்
இருக்கின்றாய் நீ.

உனக்கு மட்டுமே
சித்தித்திருக்கும்
சுஹானுபவம் அது!

எந்த சூப்பர் கம்ப்யூட்டரும்
மொழி பெயர்த்து
புரிய வைக்கமுடியாது
அந்த அனுபவத்தை.

உன்னைப் பார்த்து நாங்கள்
உணர முடியாததை
புரிந்துகொள்ள முயல்கிறோம்,
பொறாமைப்படுகிறோம்,
மெல்லத் தலை வணங்குகிறோம்.

உள்ளிருந்து உதைப்பதை
நீ வயிறு தடவி ரசிப்பதையும்
குழந்தைக்கு மார்பு கொடுத்து
கண் செருகி இருப்பதும்
நானும் உணர வேண்டுமடி!

விஞ்ஞானம் கைவிட்டாலும்
காத்திருந்து மறுபடியும்
பெண்ணாகப் பிறந்துவந்து
பெறவேண்டும் ஒரு குழந்தை!

கருத்துகள் இல்லை: