2 மே, 2009

என்ன நடக்கிறது?-10: "வருமான வரி விபரத்தை வெளியிடாத கோடீஸ்வர வேட்பாளர்கள்"

* இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்டத் தேர்தலில் மனு தாக்கல் செய்த கோடீஸ்வர வேட்பாளர்களில் 68% பேர் வருமான வரி செலுத்தியதற்கான விபரத்தை வெளியிடவில்லை.

* சென்ற தேர்தலில் போட்டியிட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் 9 சதவிகிதம்; இம்முறை 14 சதவிகிதம்.

* முதல்கட்ட தேர்தலில் 193 கோடீஸ்வரர்களும், இரண்டாவது கட்ட தேர்தலில் 288 கோடீஸ்வரர்களும், மூன்றாவது கட்ட தேர்தலில் 196 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.

* டில்லியைச் சேர்ந்த பகுஜன் கட்சி வேட்பாளர் தனக்கு ரூபாய் அறுநூறு கோடிக்கும் மேலாக சொத்து இருப்பதாகக் காட்டியுள்ளார்.

* மனுத்தாக்கலின் போது இந்தக் கோடீஸ்வர வேட்பாளர்களில் பலருக்கு வருமான வரி கணக்கிற்கான நிரந்தர அட்டை (PAN card) இல்லை.

* பான்கார்டு (PAN card) இல்லையென்றால் ரூபாய் பத்தாயிரம் அபரதாமும், வரி ஏய்ப்பு செய்த தொகையைப்போல் 100 முதல் 300 சதவிகிதம் வரை அபராதம் கட்டவேண்டும். செய்வார்களா?

நன்றி: தினமலர், தமிழ் நாளிதழ், மதுரைப் பதிப்பு, 30.4.2009.

கருத்துகள் இல்லை: