24 டிச., 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சி

புதிய புத்தகம் பேசுது இதழ் என் கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வந்தது. புரட்டியதும் முதலில் கண்ணில் பட்டது 33-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி பற்றிய செய்திதான். டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கிறது. நானும் எத்தனையோ ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சியைக் கண்டு மகிழ வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் இது இன்றுவரை நிறைவேறவில்லை. ஜனவரி 6-ம் தேதி சென்னைக்கு வரும் வாய்ப்பிருக்கிறது. பதிப்பாள நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள் ஆகியோரைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த முறையாவது கண்டு மகிழலாம், பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: