13 ஏப்., 2010

இன்று ஒரு தகவல்-28: சத்திரம் பேருந்து நிலையம் (திருச்சி)

திருச்சிப் பேருந்து நிலையத்தைக் கடந்து போகும் ஒவ்வொரு தருணத்திலும் சத்திரம் என்னும் பெயர் கொண்ட நிறுத்தத்தைப் பார்த்து வியப்பாக இருக்கும். வாகன நெருக்கடி மிகுந்த அந்த இடத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்திருக்கக் கூடும் என்று யோசித்துக் குழம்பியிருக்கிறேன். அங்கே வசிக்கும் பலரிடமும் அதைப்பற்றி விசாரித்தும் என் மனம் ஏற்கத்தக்க விடையை யாரும் சொல்லவில்லை. எதிர்பாராத விதமாக அந்த ஐயத்துக்கான விட இந்த நூலில் (சு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நான் கடந்து வந்த பாதை') உள்ளது.

திருச்சியில்
சின்னையா பிள்ளை ஒரு சத்திரம் கட்டி, ஏழை எளியவர் தங்கிச்செல்லும் வகையில் ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். வெளியூரிலிருந்து வந்து படிக்கிற பிள்ளைகளும் அங்கே இலவசமாக தங்கியிருக்கிறார்கள். பலருக்கும் உதவும் வகையில் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்தச் சத்திரத்துக்கு அவர் பெயராலேயே சின்னையாபிள்ளை சத்திரம் என்று பெயர் வந்து, பிறகு காலவேகத்தில் அதுவும் மருவிச் சுருங்கி, இப்போது வெறும் சத்திரமாக நிற்கிறது.

நன்றி:
பாவண்ணனின் 'சாதனைப்புள்ளியை நோக்கி...' (நூல் மதிப்புரை), புதிய புத்தகம் பேசுது, பிப்ரவரி 2010.

கருத்துகள் இல்லை: