27 அக்., 2010

யோக சித்தி-56: அறநெறி-2

அன்புண்மையின்  சொலடக்கம்  பொறுமை  அருள்
இன்பப்  பொதுநெறியென்று  எண்.

எல்லோருக்கும்  பொதுவாக  அறநூல்  சொல்லும்  இன்பவழி:-

1 .  அன்பு :  கடவுலன்பு,  ஆருயிரன்பு.
2 .  உண்மை:  மனசாட்சிக்கு  இசைந்து,  உள்ளத்தில் உண்மை,  வாயில்  வாய்மை,  மெயில்  மெய்ம்மை கொண்டு நடத்தல்
3.  இன்சொல்:  வஞ்சம்,  பொறாமை, கடுமை இல்லாது,  பிறருக்கு  நன்மை தரும்  இனிய சொல், இத மொழி.
4.  அடக்கம்:  செருக்கு, தற்புகழ் இல்லாமல்,  இடம்பம் இல்லாமல், அமைதியாக  அறிந்து  திருவருளைப் பணிந்து நடத்தல்
5.  பொறாமை:  நன்முயற்சிகளில் எத்தனைச் சோதனைகள், இடர்கள் வரினும் வெற்றி தோல்விகளில் வேறுபடாமல் நிதானமாகப் பொறுமையாக நடத்தல், திதீட்சை
6.  அருள்:  எல்லா உயிர்களும் இறைவனும் உடலே என்றெண்ணி  அனைத்திடமும்  எல்லையற்ற கருணையும்,  இரக்கமும், நேயமும் கொண்டு அன்பு செய்தல்;  இறைவன் திருவருளை வேண்டுதல்

இவையே, உலகோர்  உய்யத்  தத்துவப்  பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும்.  இவற்றைச் சிந்தித்தொழுகுக.  இவை  விண்ணின்பம்  அளிப்பன.       

கருத்துகள் இல்லை: