28 அக்., 2010

யோக சித்தி-57: அறநெறி-3

கொலைபுலை,  கூத்தி,  குடிகளவு  சூதாம்
வலுத்த  நரக  வழி.

மனித வாழ்வைத்  துன்பகரமாகக  வழியாவன  ஆறு  இழிநடைகள்:

1. கொலை:  உயிர்க்கொலை  கூடாது.  சீவனைச்  சிவமயமாகக்  கருதவேண்டும்.  அஹிம்சா  விரதமே  அரிய  பெரிய  தருமமாகும்.

2. புலை:   புலாலுண்ணல்,  கொன்றதைத் தின்று  உண்ணல்,  உடலை  வளர்க்கப்  போதுமான  தாவரப்  பொருள்  இருக்கையில்,  பிற  உயிர்களைக் கொன்று  அவற்றின்  ஊனை  உண்ணல்  எவ்வளவு  கொடுமை!

3.  கூத்தி:  வேசையுறவு,  விபச்சாரம்.  தருமபத்திநியுடன்  கூட  இல்லறம்  நடத்த வேண்டும்.  வேசை  என்னும்  மாசு  உலகிற் படராதொழியவேண்டும்.

4.  குடி:  தென்னங்கள்:  ஈச்சங்கள்,  திராட்சைக்கள்,  விஸ்கி,  பிராந்தி,  தேயிலை,  காப்பி,  சுருட்டு  முதலிய  மயக்கப்  பொருட்கள்  நரம்பைத்  தளர்த்தும்.  மனத்  திட்பத்தைக் கெடுக்கும்.  பிணி பல  செய்யும்.

5.  களவு:  மனத்தை,  வாழ்வை,  மானத்தைக் கெடுக்கும் கொடிய பாவம் களவு.  பிறருக்குரியதை  தன்னலத்துடன்  அபகரித்தல்  களவாகும்.

6.  சூது:  சகுனிவலை; சீட்டு,  பகடை,  உழக்குருட்டல்,  குதிரைப்பந்தயம்,  வீண்  போதுபோக்கல்   எல்லாம்  சூதாட்டமே.  வீண் போதுபோக்கல் காலத்தைச்  சூதாடலாகும்.  பொய்வாய்ச்  சூதாகும்.   சீருஞ் செல்வமும், பண்பும், பரிசும்  சூதால்  கெடும்.

இந்த  ஆறு  தீமைகளால்  இருள்  வறுமை,  துன்பம்,  நோய்,  மதிமயக்கம்,  இடர்,  இன்னல்கள்  எல்லாம்  சூழ்ந்து  மனித  வாழ்வை  நரகமாக்கும்.                   

கருத்துகள் இல்லை: