4 ஆக., 2011

மனதில் பதிந்தவை-11: ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011

ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011
------------------------------------------------------------------------------------ 
முதலில் விகடன் வரவேற்பறையிலிருந்து: "மூன்றாம் பிறை" எனும் மம்மூட்டியின் வாழ்பனுவங்கள் - தமிழில் கே.வி.ஷைலஜா - பக்கங்கள் ௧௨௮ - விலை ரூ.80/- - வம்சி புக்ஸ். இந்நூலில், "...வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிடிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்மூட்டி..."

"அறிவியல் ஆயிரம்":
"மாணவர்களுக்கு பயனுள்ள வலைப்பூ. முழுக்க முழுக்க அறிவியல் செய்திகள் மட்டும்தான். வெறுமனே வார்த்தைகளில் விவரிக்காமல் படங்கள், காட்சிகள் ஆகியவற்றோடு விளக்கம் சொல்கிறார்கள். ... பின் பி.பி.சி-யின் உரலியைக் கொடுத்திருக்கிறார்கள்(தொடர்புள்ள விரிவான செய்திகளுக்கு)..."

"சக்தே இந்தியா":   
"... ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் ஆர்வலர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம்..."

"எனக்கு இல்லையா கல்வி?" -  குறும்படம் - இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் - வெளியீடு: மனித உரிமைக் கல்வி நிறுவனம். "வசதியற்ற அரசுப் பள்ளிகள், வகுப்பறை வன்முறை, சமச்சீர் கல்வி, பாடத்திட்டம் என்று கல்வித்துறையின் அத்தனைக் கோளாறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்..." 

அடுத்து, "நானும் விகடனும்" தொடரில், வண்ணதாசன் கட்டுரை.  

கவின்மலரின், "குழந்தைகள் அடம் பிடிக்கலாம்! அம்மா..?" சமச்சீர்  கல்வி  பற்றி:  "... உயர்நீதி மன்ற விசாரணையின்போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே கொடுத்த கருத்துக்களையும் சர்மர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டது நீதிமன்றம்.  அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித்தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.  நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை.  சமச்சீர்ப் பாடத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்யவேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறியுள்ளனர்.  ஆனாலும், சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை.  அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை.  ஆனால், அறிக்கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. ... ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்காமல், தன இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு.  இது மக்களையும், நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கம் மன்றம் மன்னிக்கப்போவது இல்லை!"

வா.மு.கோமுவின் சிறுகதை, "ரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்" 

வாலியின் "நினைவு நாடாக்கள்" (நாற்பத்தோராவது)

அன்டன் பிரகாஷின் "வருங்காலத் தொழில்நுட்பம்".

"புள்ளிவிபரங்கள்" பகுதியிலிருந்து: "... பதினோரு மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்!" .  இந்த நல்ல செய்தியோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி: "ஆனந்த விகடன்"        

கருத்துகள் இல்லை: