5 செப்., 2011

நெல்லையப்பன் கவிதைகள்-81: பார்த்துப் பிறந்த கவிதை

வெள்ளம் சுழித்தோடிய
ஆற்றின் ஒரு கரையில்
குட்டியுடன் நின்ற கரடி,
மறுகரைக்கு போய் விட்டால்
மாறாத விடுதலை என நம்பி
குட்டியை தலை சுமர்ந்து
நதி கடக்க தொடங்கியது

இடர் பல வந்த போதும்
மெதுவாக முன்னேறியது.
அப்பப்பா எத்தனை துயர்கள்!
விடாது முன்னேறியது கரடி.

நடு வழியில் ஆழமும் இழுப்பும் அதிகமாக
சமாளிக்க முடியாத கரடி
குட்டியை தண்ணீருக்குள் போட்டு
அதன்மீது ஏறிநின்று
தன்தலை காத்துக்கொண்டது.

வெள்ளம் சிறிது வடிய
சிரத்தையுடன் தன் குட்டியை
தண்ணீரிலிருந்து வாரி எடுத்து
தலையில் வைத்துக்கொண்டு
மறு கரை நோக்கி நடந்தது

கரடியை நான் உங்களுக்கு
அடையாளம் காட்டத் தேவையில்லை;
கரடிக்குட்டியது மட்டும் பாவம்
கடல் சூழ்ந்த நாட்டின்
அப்பாவித் தமிழ் மக்கள்.

கருத்துகள் இல்லை: