2 டிச., 2011

எனக்குப் பிடித்த கவிதை-69: மனிதம்

என் மனம் அழுதது
பறவைகளின் சுதந்திரத்தை 
விலங்குகளின் கள்ளங்கபடமற்ற தன்மையை 
மனிதன் கற்றுக் கொண்டிருக்கலாம்.
இந்த உலகம் 
அழகாக இருந்திருக்கும்  
ஆனால் அவனோ
பறவைகளுக்கும் 
விலங்குகளுக்கும் 
மனித புத்தியைக்
கற்றுக் கொடுத்துவிட்டான்.
விலங்கிலிருந்து
மனிதமானது
பரிணாம 'வளர்ச்சி' தானா?


கவிக்கோ அப்துல்ரகுமான் 



கருத்துகள் இல்லை: