7 ஜன., 2013

சூரியின் டைரி-58: குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?


சூரியின் டைரி-58:  குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?

ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறு இதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய வந்தே விட்டது வால்மார்ட் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:

இன்று பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

ஆன்லைன் சூதாட்ட வர்த்தகம், சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரி, வாட் வரி, வருமான வரி என சகல திசைகளில் இருந்தும் தாக்கும் விதவிதமான வரிகள்தான். ஒரே பொருள் பத்து பேரிடம் கைமாறி வரும்போது பத்து இடங்களிலும் அதற்கு வரி விதிக்கப் படுகிறது. அந்த வரிவிதிப்புகள்தான் பொருட்களின் விலையை அதிகரித்துவிடுகிறது.

அரிசி விலை ஏன் உயர்கிறது? விவசாயிகள் பெயரில் பெரும் நிறுவனங்களின் ஆட்கள் விவசாயிகளிடமிருந்து ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்து அதை அரசு குடோனில் இருப்புவைக்கிறார்கள். இந்த இருப்பைக்காட்டினால் வெளி நாட்டு வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும். நாடு முழுவதும் ஆஙகாங்கே இப்படி நெல்லைப் பதுக்கிவைக்க, ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும்.  விலை கடுமையாக இருக்கும். நெல்லை அதிக விலைக்கு விற்பார்கள்.  லாபத்துக்கும் லாபும். இடையே இருப்பைக் காட்டி மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிலும் லாப்ம்.  இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே.  இன்னும் இப்படி நிறையக் குள்றுபடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்..

தவறு என்று தெரிந்தும் அதை ஏன் ஊக்குவிக்கிறது மத்திய அரசு?  சாதாரண வியாபாரிக்குத் தெரிந்த உண்மை, மெத்தப் படித்த பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்.......
.

அந்நியரின் உரத்துக்கு மண்ணைப் பலியாக்கினோம், பாழாய்ப்போனது விவசாயம். இப்போது கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஊடுருவியிருக்கும் வால்மார்ட்டுக்கு    நம்மவர்களின் வணிகத்தையும் பலி கொடுக்கப் போகிறோமா?!

நன்றி: திரு சஞ்சீவிகுமார் மற்றும் ஆனந்தவிகடன். 


தவறான நபர்கள் கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது?  தங்கள் சுய நலத்திற்காகவும், வெளிநாட்டான் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களுக்கும் இவர்கள் இழைக்கும் அநீதிகளை என்னென்று சொல்வது?



வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக மட்டும் சென்ற நான்காண்டுகளில் ரூபாய் நூற்றம்பது கோடி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதும், அதைத் தொடர்ந்து அவர்கள் மட்டுமல்ல அவர்களைப் போன்ற மற்ற நிறுவனங்களும் இதுபோல் நிறைய செலவு செய்துள்ளன என்ற் செய்திகளும் குமுற வைக்கின்றன, நெஞ்சைக் கொதிக்க வைக்கின்றன.

இந்த நிறுவனங்களெல்லாம் நம்மைக் கொத்திக் கூறுபோடக் காத்திருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்

இந்தத் தீய சக்திகளிடமிருந்து இந்த நாடு என்று மீளுமோ?  கிழக்கு இந்தியக் கம்பெனி என்று வியாபாரத்திற்காக வந்த ஒரு நிறுவனம் இந்த நாட்டை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்படுதியதை எப்படி அவ்வள்வு எளிதாக நாம் மறந்துவிட்டோம்?









கருத்துகள் இல்லை: