14 ஜன., 2013

சூரியின் டைரி-63: கவலை தருபவை – செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்


சூரியின் டைரி-63: கவலை தருபவை –   செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி ஒன்பதாம் நாள் இதழில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதிவரும் தொடர்கட்டுரை ஆறாம் தினையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:

பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை.  காகிதத்தினால் அழியும் காடுக்ளைப் பார்த்து, கணினி உபயோகத்திற்கு மாறுவதை குறை சொல்வது முட்டாள்தனம்.  ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கும் ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவுகளைக் கண்டிப்பாக எதிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது.  கொஞ்ச நஞ்சம் அல்ல... கிட்டத்தட்ட 8,000 டன் பயன்படுத்து, தூர எறி எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது.  உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும், சீனாவும்தான்.  ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட்... கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித்தாய்க்குச் செரிக்காது தோழா!

விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும் முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர்களே!

சில புதுசுகளைக் காட்டிலும், பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்ல, பழ்மையிலும் உறைந்து இருக்கிறது.


நன்றி: மருத்துவர் சிவராமன் மற்றும் ஆனந்தவிகடன்

கருத்துகள் இல்லை: