30 செப்., 2020

நூல் நயம் : எஸ்ராவின், "எலியின் பாஸ்வேர்டு"

பெயர் : ரியா ரோஷன் 
வயது : 11 
வகுப்பு : ஆறாம் வகுப்பு 
இடம் : சென்னை 
பிரிவு : #குழந்தைகள் 
புத்தகம் : எலியின் பாஸ்வேர்டு 
ஆசிரியர் : S.ராமகிருஷ்ணன் 
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம் 

கதை : 
பகைவர்களாக இருந்த பாம்பு கூட்டமும் எலி கூட்டமும் நண்பர்களான கதை தான் இது. எலிக்குஞ்சுகளை பாம்புகள் கொன்று தின்று கொண்டே இருக்கின்றன. அதனால் எலி கூட்டத்தின் நண்பன் முயல்,  பாம்புகளின் ராஜா நாகாவை சந்தித்து எலிகளை கொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். நாகாவும் எலிகளின் ஒப்புதல் இல்லாமல் நாங்கள் அவர்களை சாப்பிட மாட்டோம் என்று ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும் பாம்புகள் எலி குஞ்சுகளைத் தின்று கொண்டே தான் இருந்தன. எலி கூட்டத்திடம் முயல் உங்களின் வீட்டிற்கு கதவு செய்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. ஆனால் பாம்புகள் ஒன்று சேர்ந்து கதவை இடித்து குஞ்சுகளை சாப்பிட்டு விடுகின்றன. கடைசியாக முயல் உங்களில் ஒருவனை படிக்க வையுங்கள் என்று சொல்கிறது.எலி கூட்டம் டோம் என்ற எலியை படிக்க வைக்க முடிவு செய்கிறார்கள். அவன் ஒரு வருடத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்து விடுகிறான். அதன் பிறகு லண்டன் சென்று படித்து திரும்புகிறான். எலிக் கூட்டத்திற்கு அவன் ஒரு டிஜிட்டல் கதவும் பாஸ்வேர்டும் அமைத்து தருகிறான். போட்டியாக பாம்பு கூட்டமும் அதேபோல் ராக் என்ற பாம்பை படிக்க வைக்கிறார்கள். டோமிற்கும் ராக்கிற்கும் நடக்கும் பாஸ்வேர்ட் சண்டையில் டோம் வெற்றி பெறுகிறான். எலிக்கூட்டமும் பாம்பு கூட்டமும் ஒன்று சேர்க்கிறார்கள்.

இந்த கதையில் எனக்கு பிடித்தது :

1.Ratatouille படத்தில் வரும் எலி போல cute ஆன எலி தான் டோம்.சுட்டியா இருந்தாலும் hardwork பண்ணி படிக்கிறான்.

2.டோம் கப்பலில் இருக்கும்போது அவனுக்கு பசித்தும் அவனுக்கு உதவி செய்த மீனை அவன் சாப்பிடவே இல்லை. 

3.இதில் வரும் firewall tactics எனக்கு பிடித்து இருந்தது. 

4.மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் லண்டன் சென்று படித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றினர். அது போல டோம் கூட லண்டனில் படித்து அவனின் எலி கூட்டத்தை காப்பாற்றினான்.

நன்றி 
ரியா ரோஷன்

நன்றி : 
ரியா ரோஷன்
மற்றும் 

கருத்துகள் இல்லை: