14 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-12: "இலக்கு"

இலக்கு

கருத்தரங்கில் கைகலப்பு.

தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.

வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய
சொல்எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒருசொல்லை முன்மொழிய,
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,
காலில் மிதிபட்டது திருக்குறள்.

1 கருத்து:

Sublime சொன்னது…

great going..hats off 2 mr.suri n mrnellaiappan