24 டிச., 2007

திருக்குறள் ஊழியம்-1 : பேராசிரியர் தமிழண்ணல்

நாளும் திருக்குறளை ஓதுவோம் !

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
நம் வாழ்வு சீர் பெற்றுச் சிறக்கும்,
செல்வத்தில் செழிக்கும்!
வையத்தில் வாழ்வாங்கு வாழலாம்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
துன்பங்கள் விலகிப் போகும்!
ஊழையும் வென்று வாழலாம்!
வாழ்வின் உச்சத்தைத் தொடலாம்!
புகழின் உச்சத்தை அடையலாம்!

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
நமது சாதி சமயப் பூசல்கள் நீங்கும்!
மனிதநேயம் வளரும்!
உலகின் சமுதாயம் ஒன்றுபடும்!
ஒவ்வொரு தனிமனிதர் வாழ்வும்
ஒப்பற்ற நிலைக்கு உயரும்!

பேராசிரியர் தமிழண்ணல்
'திருக்குறள் ஊழியம்'
4, இலூர்து நகர் 7ம் தெரு
கோ.புதூர்
மதுரை-625 007

கருத்துகள் இல்லை: