3 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-4: "வேலைக்குச் செல்லும் பெண்ணே....!"

நெல்லையப்பன் கவிதைகள்-4

வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

வேலைக்குச் செல்லும் பெண்ணே!
மேலே உரசும் எருமை மாடுகள்,
முதுகின் மேல் மூச்சு விடும்
விஷ சர்ப்பங்கள்,
பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்,
எட்டிப் பார்க்கும் ஓட்ட்கங்கள்,
வழியில் நிற்கும் கொழுத்த கழுதைகள்,
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்,
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ளநரிகள்,
சந்தர்ப்பம் எனும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள் -
எப்படி சமாளிக்கிறாய்,
தனியாக ஒரு மிருகக் காட்சி சாலையை?

பெண் நிதானமாகப் பதில் சொன்னாள்:
"எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது,
சிங்கம், அது பெண் சிங்கம்!"

கருத்துகள் இல்லை: