3 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-5: "உயிர் நீர்"

நெல்லையப்பன் கவிதைகள்-5

உயிர் நீர்

மலையில் குதித்து வந்து
சமவெளியில் வேகம் குறைத்து
பள்ளி செல்லும் குழந்தை போல
கடலுக்குள் செல்ல மறுத்து
அடம் பிடிக்கும் நதியின்
சிணுங்கலின் தமிழாக்கம்:
"ஏ மனிதா, என்னை வீணாகக்
கடலில் கலக்க விட்டு விட்டு,
கடல் நீரையா குடிநீராக்குகிறாய் ?"

கருத்துகள் இல்லை: