2 ஏப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-14: "தீவுகள்"

நெல்லையப்பன் கவிதைகள்-14

தீவுகள்

ஜாதி, மல்லிகையில்
மட்டும் இருக்கட்டும்.
மதம், யானைக்குக்கூடப்
பிடிக்க வேண்டாம்.
மொழி, முதலில்
ஊடகம் தான்.
தோலுக்குக் கீழே
எல்லோரும் ஓர் நிறம்,
எனில் நான்கின் பெயராலும்
சுவர்கள் எதற்கு?
பாலங்களை எல்லாம்
சுவர்களாக்கி விட்டால்,
திசைகளை மறந்து
தீவுகளாகி விடுவோம்.

கருத்துகள் இல்லை: