31 மார்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-13: "வன்முறை"

நெல்லையப்பன் கவிதைகள்-13

வன்முறை

பேருந்தில் பெண்கள் நின்றுவர
பெண்கள் இருக்கையில் வசதியாய்
ஆண்கள் அமர்ந்து வருவதும்,
நியாயமான காரணம் இருந்தும்
விடுப்புதர அதிகாரி மறுப்பதும்,

புத்தம் புது ரோஜாவை
ஒவ்வொன்றாய் இதழ் பிடுங்குவதும்,
தொலைக்காட்சியில்
முரட்டுக் குத்துச்சண்டைகளை
தேடி ரசித்துப் பார்ப்பதுவும்,

தாமதமாகப் படுக்கைக்கு
புது மருமகளை அனுப்புவதும்,
பிச்சைக்காரனை அடிப்பதுவும்,
பயணத்தில் பலர் பார்த்திருக்க
தான் மட்டும் உண்ணுவதுவும்,
சப்தமாகப் பேசி
காதுகளைத் தாக்குவதுவும்,

அசந்து தூங்குபவரை
காரணமின்றி எழுப்புவதும்,
ஆயுதங்கள் பாதுகாக்கும்
என்ற நம்பிக்கையும்,
வன்முறை, வன்முறை, வன்முறை!

கருத்துகள் இல்லை: