19 ஜூலை, 2008

என் கவிதை-2 : பாட்டி!

பாட்டி! பாட்டி!!
பாடாய்ப் படுத்தும் பாட்டி.
இரவைப் பகலாய்,
பகலை இரவாய்ப்
பார்க்கும் பாட்டி.
அது கூடாது,
இது கூடாது,
எதிலும் பிரச்னை.
பல்தேய்ப்பது முதல்
குளிப்பு,
உடை, உணவு,
தலை சீவல்,
பள்ளி, படிப்பு,
படுக்கை என்று
அனைத்திலும்
உன் மூக்கு!
உல்லாசமான
கோடை விடுமுறை
சொல்லாமல் போனது.
ஓடும் ரயிலில் உயிர் விட்டு
ஒன்றுமில்லாமல்
செய்த பாட்டி!


கருத்துகள் இல்லை: