19 ஜூலை, 2008

பிருந்தாவின் கவிதைகள்-1 : அன்புள்ள அம்மா!

அன்புள்ள அம்மா!
எங்கு திரும்பினாலும்
வீட்டின் நினைவலைகள்
நினைக்க நினைக்க கவலைகள்.
என் கண்ணில் நீர்த்தேக்கம்,
மனத்தில் தனிமையின் தாக்கம்,
எல்லாம் நீயில்லாத ஏக்கம்.
விடுதியும் வீடும் ஒன்றாகுமா?
அங்கோ,
காலையில் எழுப்பவும்,
அறுசுவை உணவளிக்கவும்
அன்பான நீ!
இங்கோ,
கரகரப்பான அழைப்பு மணி!

கருத்துகள் இல்லை: