23 ஜூலை, 2008

நலக்குறிப்புகள்-3: "வாழை இலையின் மருத்துவ குணங்கள்"

1.வாழை இலையில் சூடான அன்னத்தை நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் கண், இதயம், மூளை, குடல் முதலிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும்.
2.வாழை இலைத் துளிரை அரைத்துக் குடித்து வந்தால் ஸோரியாஸிஸ் முதலிய 18 வகை தோல் நோய்கள் குணமாகும்.
3. புற்றுநோய், பிளவை, தொழுநோய் முதலிய நோய்கள் ஏற்படுத்தும் புண்களின் மேல் வாழை இலையில் விளக்கெண்ணெய் தடவி, கட்டி வர அந்தப் புண்கள் ஆறும்.
4. இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களில் வாழையிலையை போர்த்திக் கொண்டு சூரிய ஒளிக் குளியல்கள் செய்வார்கள். இதனால் உடலின் கழிவுகள் வியர்வையாக வெளியேறும். ஸோரியாஸிஸ், அதிக உடல் எடை முதலிய நோய்கள் நீங்கும்.

நன்றி: "இயற்கை நாதம்", (இயற்கை நல மாத இதழ்), ஜூன் 2008

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், தியாகராஜபுரம்-609802, தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: