21 ஜூலை, 2008

எனக்குப் பிடித்த கவிதை-26 : 'ஐம்பது வயதில் புரிகிறது' - கவிஞர் வைரமுத்து

'ஐம்பது வயதில் புரிகிறது' - கவிஞர் வைரமுத்து

ஓரோர்
பொழுது
ஞானக் கிடங்காய்,
வேறோர் பொழுது
குப்பைக் கூடையாய்
மாறி மாறித் தோற்றங் காட்டும்
மனமே!

உனது பள்ளம் எனது சமாதி
உனது சிகரம் எனது உயரம்.

மனமே! என் மனமே!
சூரியனாய் இரு,
பொறாமைத் தூசுகள்
புகாதபடி.

வானமாய் இரு,
அவமானத் துப்பல்கள்
ஒட்டாதபடி.

மேகமாய் இரு,
மெய்வருத்தி ஞானம் தேக்கி
சமத்துவ மழையாய்ச் சிதறும்படி.

காலமாய் இரு,
எனக்குப் பிறகும்
நீளும் படி.



"கொஞ்சம் தேநீர், நிறைய வானம்"
சூர்யா லிட்டரேச்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை.
ஜனவரி 2005
விலை : ரூபாய் 75/-

கருத்துகள் இல்லை: