23 ஜூலை, 2008

எனக்குப் பிடித்த கவிதை-27: "காய்த்தல்"

எனக்குப் பிடித்த கவிதை-27: "காய்த்தல்"

கை நழுவிய சொல்லொன்று
நிலம் பிளந்து
உள்ளிரங்கியது.

எங்கெங்குமாய் கிளைதெழுந்த
செடிகள் தோறும்
சொற்கள் காய்த்தன.

காத்திருப்பின் நீள்பொழுதில்
கனியவேயில்லை,
ஒரு சொல் கூட.

வெறுமையின் கூடுடைத்து
திரும்பி நடக்கையில்...
காய்த்திருந்த சொற்கள்
பூவாய் மாறியிருந்தன
மறுபடியும்.

- மு.முருகேஷ் கவிதைகள்
"புதிய பார்வை", ( மாதம் இருமுறை தமிழிதழ்) டிசம்பர் 16-31, 2007.
நன்றி: திரு மு முருகேஷ் & புதிய பார்வை.

கருத்துகள் இல்லை: