14 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-32: "உரக்க உணர்! - கவிஞர் ஜனநேசன்"

உன் பெருமூச்சால்
ஓர் இலை அசையலாம்!
ஓர் இலையால் ஒரு கிளை,
ஒரு கிளையால் ஒரு மரம்,
தோப்புகளும் அசையலாம்!
அசைவுகளின் உசாவலை
விசாரிக்கத் தென்றல் வரலாம்!
மாற்றத்தை முன்மொழிந்து
புயலும் எழலாம்!
ஆகவே சகோதரியே,
உன் அழுகையும், உவகையும்
உரத்தே ஒலிக்கட்டும்!
ஓர் இயக்கமாய் இயங்கட்டும்!

('புதிய ஆசிரியன்' நவம்பர் 1998 இதழிலும், 'செம்மலர்' பிப்ரவரி 1999 இதழிலும் வெளியானது.)

புத்தக வடிவில்:
"மஞ்சள் சிலுவை"
கவிஞர் ஜனநேசன்
கிருதயா பதிப்பகம்,
காரைக்குடி
விலை ரூபாய் இருபத்தைந்து மட்டும்.

கருத்துகள் இல்லை: