14 ஆக., 2008

பாரதி கவிதை-6: 'வரம் கேட்டலிலிருந்து' ஒரு பகுதி

பாரதி கவிதை: 'வரம் கேட்டலிலிருந்து' ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

கருத்துகள் இல்லை: