23 செப்., 2008

திருவருட்பா-1: "அன்பெனும் பிடியுள் அகப்படும்..."

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!

பரசிவமே! நீ அன்பெனும் கைப்பிடிக்குள் அகப்படும் மலை! அன்பு எனும் குடிலுக்குள் புகுந்தருளும் அரசு நீ! அன்பாம் வலைக்குள் அகப்படும் பரம்பொருள் நீ! அன்பாகிய கையில் வந்தடங்கும் அமுதம் நீ! அன்புக்குடத்துள் அடங்கும் கடல் நீ! அன்பு எனும் உயிர்ஒளி வீசுகின்ற அறிவே! அன்பாகிய அணுவுள் அமைந்த பேரொளியே! நின்னை யான் வாங்குகின்றேன். அருள் புரிவாய் , ஐயனே!.

கருத்துகள் இல்லை: