9 செப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-35: "நிலவைப் பிடித்து..."

நிலவைப் பிடித்துச் - சில
கரைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்.
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி.
தரள மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவளம் பதித்த இதழ்.
முகிலைப் பிடித்துச் - சிறு
நெளிவைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்.
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்.

நன்றி: "குறிஞ்சி மலர்", நா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை: