15 டிச., 2008

கருத்துக்கள்-12: "லஞ்சம், இலவசம், அன்பளிப்பு, சலுகை!"

இன்று நாடெங்கும் செழித்து வளர்ந்த்திருக்கும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் ஆணிவேரை தேடிச்சென்றால் அதன் உண்மை நமக்கு கசக்கத்தான் செய்யும். லஞ்சம், இலவசம், தள்ளுபடி, அன்பளிப்பு மற்றும் சலுகை - அப்பப்பா, இதற்கு எத்தனை ரூபம்? காரணம் நமது சமுதாயமும் அரசும்தான். சிறுவயதிலேயே நிறைய இலவசங்களும், சலுகைகளும் வாங்கிப்பழகிவிட்ட பிறகு, அதை விடமுடியாமல் முக்கிய பொறுப்புக்கு வந்தபிறகும் 'அன்பளிப்பு' என்ற பெயரில் தொடர்கிறார்கள். இலவசமாக எது கிடைத்தாலும் நாம் கௌரவக் குறைச்சலாக, பிச்சையாகக் கருதினால் மட்டுமே நம் நாடு முன்னேறும். - ஷே.குலாப்ஜான், திருப்பத்தூர்.
நன்றி: திரு ஷே.குலாப்ஜான் & தினகரன், மதுரை. (டிசம்பர் ௧௧. ௨00௮ - "கடிதங்கள்")

கருத்துகள் இல்லை: