15 டிச., 2008

என்ன நடக்கிறது?-6: "கட்டிடத் தொழிலாளர்களுக்காக வசூலித்த 940 கோடி ரூபாய் எங்கே?"

கட்டிடத் தொழிலாளர்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த, கட்டுமானத் தொழிலில் உள்ள 'பில்டர்களிடம்' இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தீர்வையாக மாநில அரசுகள் வசூலிக்கின்றன. 1996-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் நலச்சட்டத்தின் கீழ் இந்த தீர்வை வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொகை சரிவர வசூலிக்கப்படுவதும் இல்லை, தொழிலாளர் நலனுக்காகச் செல்விடப்படுவதும் இல்லை. சில மாநிலங்களே வசூலித்து, அந்தத் தொகையில் மிகச்சிறிய அளவில் செலவழிக்கின்றன என்று தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் மிகவும் வேதனை அடைந்தனர். அவர்கள் கூறுகையில், திட்டங்களை அமல்படுத்தவேண்டிய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் அசட்டையாக இருந்துள்ளது வேதனை தருகிறது. இது தொடர்பான பதில் அறிக்கையை நான்கு வாரத்துக்குள் மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர். இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீல் காலின் கொன்சால்வஸ் தெரிவித்தாவது: "இந்தியாவின் தலைநகரமான டில்லி மாநிலத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஏகப்பட்ட கட்டுமான திட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், பலமாடிக் குடியிருப்பு, வர்த்தக கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் டில்லி அரசு, இதுவரை வசூலித்த 140 கோடியில் ஒரு பைசா கூட, கட்டிடத்தொழிலாலர்களுக்குச் செலவழிக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு 174 கோடி ரூபாய் வசூலித்துள்ளது; அதில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புக்கு மட்டுமே திட்டங்களைத் தீட்டி அமல் படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு இதுவரை இரண்டரைக் கோடி மட்டுமே வசூல் செய்து, அதில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே தொழிலாளர்களுக்காகச் செலவழித்துள்ளது. தமிழகம் 246 கோடி வசூலித்துள்ளது. குஜராத் 91 கோடி வசூலித்துள்ளது.
தகவல்: தினமலர், மதுரை, டிசம்பர் 9, 2008.
நன்றி: தினமலர்.

கருத்துகள் இல்லை: