22 டிச., 2008

என்ன நடக்கிறது?-7: "அரிசி ஒரு ரூபாய், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்!"

தினமலர் வார இதழில் ஒரு வாசகர் தமது உள்ளக்குமுறலை ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் நாட்டில் பல பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு ரூபாய். ஆனால் அந்த கழிப்பிடங்களுக்குள் நுழைந்து, புதிதாக ஏதாவது நோய் கொள்முதல் செய்யாமல் வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வெளிச்சம் கிடையாது, பராமரிப்பு கிடையாது, சமயத்தில் தண்ணீரும் இருக்காது. மூக்கைக் கையில் பிடித்தபடியேதான் உள்ளே செல்லவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இரண்டு ரூபாயா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் பினாமிகள் மூலமாக ஒப்பந்தம் பெற்று, பணம் குவிப்பதிலேயே குறியாக இருப்பதால் பராமரிப்புச் செலவு செய்யப்படுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அடி, உதைதான். முதலில் கழிப்பிடங்கள் பணம் சம்பாதிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ளனவா அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக சேவை நோக்கில் கட்டப்பட்டிருக்கின்றனவா என்பது தெளிவாக வேண்டும். சேவை நோக்கம் என்பது உண்மையானால் கழிப்பிடங்களை தொண்டு நிறுவனங்களோ அல்லது பராமரிப்புச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பெரிய தொழில் நிறுவனங்களோ நிர்வகிக்க வேண்டும். நடக்குமா?

கருத்துகள் இல்லை: