3 டிச., 2008

"சத்யாக்கிரகம்" - பரதன் குமரப்பா

'சத்தியாக்கிரகம்' என்ற வார்த்தையின் பொருள் உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பது என்பதாகும். சத்தியமே காந்திஜிக்குக் கடவுள். ஆகையால் சத்தியாக்கிரகம் என்ற சொல், கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுடைய வாழ்க்கைமுறை என்று பொதுவாகப் பொருள் படுகிறது. எனவே உண்மையான சத்தியாக்கிரகி கடவுள் பக்தனாவான்.

இப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகில் தீயகாரியங்களை எதிர்க்காமல் இருக்கமுடியாது. உலகில் அநீதி, கொடுமை, சுரண்டல், ஆக்கிரமிப்பு ஆகியவை இருப்பதை அவன் காண்கிறான். தன்னிடமுள்ள சக்திகளைஎல்லாங்கொண்டு அவைகளை அவன் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இப்புனிதப்போரில் அவனுடைய நன்கூரமாயிருப்பது சத்தியம் அல்லது பரம்பொருள். எல்லா உயிர்களும் ஒன்றென உணர்வதுதான் இவ்வுலகத்தில் சீரிய உண்மையாகையால் அன்புடன் எல்லோருக்கும் தொண்டு செய்வதன் மூலமே அதாவது அஹிம்சையின் மூலமே சத்தியத்தை அடையமுடியும். ஆகவே சாதரணமாகப் புரிந்துகொள்ளப்படுகிற குறுகிய பொருளில் சத்தியாக்கிரகம் என்பது ஆன்ம சக்தி அல்லது அஹிம்சையின் மூலம் தீமையை எதிர்ப்பதாகும்.

மஹாத்மா காந்தியின் 'சத்தியாக்கிரகம்' (தமிழ் மொழிபெயர்ப்பு) நூலுக்கு திரு பரதன் குமரப்பா அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: காந்திய இலக்கிய சங்கம், மதுரை.

கருத்துகள் இல்லை: