3 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-3:

முழுதாகச் சிரித்தாலுன் அச்சம் நாணம்
முகமாடும் மடம்பயிர்ப்பு சிதறுமென்றோ
இழுது, தீமுன் உருகல்போல் என்னுள் மின்னி
ஏந்துநகை தன்னாலே உருக்கும் என்றோ
பொழில்மலரின் அழகொளியாய் பொழியும் இன்பப்
புன்னகையைப் பாதியிலே நிறுத்தி மின்னும்
எழில்மலராம் கண்ணாலே நகை முடிக்கும்
என்னாளே! பொன்னாளே! ஏனிச் செய்கை?

கருத்துகள் இல்லை: