20 ஜன., 2009

கடிதம்-9: "அவமானம் ஒரு சிலருக்கு மட்டும்தானா?"

இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, கோடி கோடியாக! இப்போது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.7800 கோடி ஊழல் செய்து உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்துள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்தே இது நடைபெற்று வந்திருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் சிலர் வயிற்றுப்பசிக்கு தேங்காய், மாங்காய், வேர்க்கடலை, மீன் போன்றவைகளையும், ஆடு, மாடுகளையும் திருடுவார்கள். திருட்டு தெரிந்துவிட்டால் மரத்தில் கட்டிப்போட்டு அடிப்பார்கள். அவமானம் தாங்காமல் சிலர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் இல்லை, உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்து சாதனை புரிந்துவிட்டு, வெட்கமோ, மானமோ இன்றி இவர்கள் டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். அவமானம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தானா? - எம்.கோவிந்தராஜன், வந்தவாசி.
நன்றி: திரு எம்.கோவிந்தராஜன் & தினமணி, மதுரை, 13.1.2009.

கருத்துகள் இல்லை: