18 பிப்., 2009

இன்று ஒரு தகவல்-18: "28 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!"

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன், அழ.வள்ளியப்பா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், சாண்டில்யன், கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலவர் த.கோவேந்தன், சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீதகிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு உள்ளிட்ட இருபத்து எட்டு தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

தகவல்: தினமலர், மதுரை, 18.2.2009.
நன்றி: தினமலர்.

கருத்துகள் இல்லை: