19 பிப்., 2009

இன்று ஒரு தகவல்-19: "அணையாத அடுப்பு!"

திருவருட் பிரகாச வள்ளலார், வடலூரில் சத்திய ஞானசபையில், 1867 மே மாதம் 23-ம் நாள் தர்மசாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு 142 ஆண்டுகளாகியும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு மற்றவை பக்தர்கள் மூலமாக வந்துவிடுகிறது. தினமும் காலை ஆறு மணி, மற்றும் எட்டு மணி, பகல் பன்னிரண்டு மணி, மாலை ஐந்து மணி மற்றும் இரவு எட்டு மணி என தினமும் ஐந்து வேளை அன்னதானம், தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
ஆதாரம்: தினமலர், 7.2.2009.

கருத்துகள் இல்லை: