30 மார்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-48: "இளைய மகள்"

என்னைத் தெரிகிறதா?

இளைய முகம் தெரிகிறதா?

அன்புக்குக் காத்திருக்கும்

அடியவளைத் தெரிகிறதா?


மின்னல் வகிடெடுத்து

மேகநிலாப் பட்டுடுத்து

சின்ன அடிபதித்து

சிலம்பொலிக்க வருபவள்நான்

பொன்னெடுத்து நிற்பார்க்குப்

பூவைமுகம் தெரியாது

"என்னடிநீ அதிகாரம்"

என்னிடத்தில் பலிக்காது


கற்பனைக்கும் சொற்களுக்கும்

காதல்வரப் பிறந்தவள்நான்

சிற்றிலக்கிய ஓடைத்

திருமணலில் வீடுகட்டி

காலம் உதிர்த்தமலர்க்

கனவுகளைத் தலைசூடி

நீலவிழியால் உவமை

நீல வரைந்தவளாய்


பொன்கம்ப மண்டபத்தில்

புதியுளா வருபவள்நான்

வென்ற மனத்துரவி

வேந்திளங்கோ பணிமகள்நான்

தேவாரப் பெருங்கடலின்

தீர்த்தத்தில் நீராடி

நாவாரவே பருகும்

நாலாயிரச் சுவைநான்

நாலடியில் ஈரடியில்

நாயகிஎன் தாள்பார்த்து

நூலையே காணாது

நொந்தவர்கள் பற்பலபேர்


மேகலைகள் கொஞ்சி

விளையாடும் என்எழிலை

மாகலைகள் எல்லாம்

மண்டியிட்டுப் பார்த்திருக்கும்

கோடிமணி ஆசனம்

குடியாய்நான் இருப்பதில்லை

பாடுபடும் கரங்களிலே

பாக்குவெற்றிலை ஆவேன்

நாற்றுநடும் ராமாயீ

நாவிலோறு தேனாவேன்

ஏற்றம்தொடும் மாசாணி

தொழிலொரு கிளியாவேன்


சாலைகளில் மாட்டுவண்டிச்

சலங்கையிலே கொஞ்சிநிற்பேன்

காலத்தை மிதிக்குமவர்

கண்வீச்சைக் கெஞ்சிநிற்பேன்

களையெடுக்கும் கூந்தலிலே

காற்றுவந்து கதையுரைக்க

விளையுமந்தப் paraich chirumi



















கருத்துகள் இல்லை: