2 ஆக., 2009

தேவாரம்-11:

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஓடியும் உறைப்பனாய்த் திரிவேன்;
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்;
பாசுபதா! பரஞ்சுடரே!

- சுந்தரமூர்த்தி நாயனார்

கருத்துகள் இல்லை: