17 ஆக., 2009

எனக்குப் பிடித்த கவிதை-54: "நிழல்" - வெ.தி.சந்திரசேகரன்

கருவிலே உருவாக்கி வெளியிலே விழும்வரை
கருவறை நிழலானது
தரையிலே தவழ்ந்துடல் நிமிர்நடை இடும்வரை
தாய்மடி நிழலானது
அரங்கிலே சிறந்தவன் ஆகிவிடும் நாள்வரை
தந்தையின் நிழலானது
இறைவனின் நிழல்போல ஈடிணைய ற்றதுஇவ்
இருவரின் நிழலானது.

அறிவினைப் பெறும்வகை உரைத்திடும் குருவடி
ஆனந்த நிழலானது
உறவினைப் பெறுவது சுகமென நினைத்ததோர்
உயிர்நிழல் எனதானது
இருவரும் இணைந்திட எங்களின் நிழலிலே
எண்ணிக்கை பலவானது
ஒருவரின் நிழலிலே இன்னொருவர் வாழ்வது
இயற்கையின் விதியானது.

- "முற்றுப் புள்ளி சற்றுத் தள்ளி : கவிதைகள்"
வெ.தி.சந்திரசேகரன்
ராசி பதிப்பகம், நெய்வேலி
பக்கங்கள் 96
விலை ரூ.45/-

நன்றி: திரு வெ.தி.சந்திரசேகரன் & ராசி பதிப்பகம்

கருத்துகள் இல்லை: