9 செப்., 2009

பட்டுக்கோட்டை பாடல்-9: "நீரலை வெள்ளி மலர்"

மின்னும் இயற்கையெல்லாம் உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக்கனல் மூட்டுதடி
வானநிலாப் பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவரும் நீரலையில் வெள்ளிமலர் பூத்ததடி!
வள்ளியுனை எதிர்பார்த்த மெல்லுடலும் வேர்த்ததடி!
இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி
மெல்லத்தமிழ் உனது சொல்லில்வந்து கொஞ்சுதடி!

கருத்துகள் இல்லை: